பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு நிறைவையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்
- கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி பெற்று, வட்டார அளவில் விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
- வெற்றிபெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றி தழ்களை வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக, பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு நிறைவடைந்ததையொட்டி, சென்னையில் இருந்து வரப்பெற்ற தீபச்சுடரை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி பெற்று, வட்டார அளவில் விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை நூற்றாண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, பொது சுகாதாரத் துறையின் சார்பாக ஒவ்வொரு வட்டார அளவிலும் கடந்த 6-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
வெற்றி பெற்ற அணிகளை மாவட்ட அள வில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கடந்த 17-ந் தேதியன்று தொடங்கி வைக்கப்பட்டு, 20-ந் தேதி வரை நடத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து அனைத்து வட்டார அளவிலும் சுகாதார துறை சார்பாக விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மருத்துவ துறையில் ஓய்வு பெற்ற மருத்துவ பணியாளர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும், மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றி தழ்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர். ரமேஷ்குமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, மாவட்ட திட்ட அலுவலர் (தொற்றாநோய்) டாக்டர்.திருலோகன், டாக்டர்கள். விமல், திலக்குமார், சுரேஷ், சங்கீதா, மரைத்தென்றல், சுகாதாரப் பணிகள் நலக்கல்வியாளர் சப்தமோகன், நேர்முக உதவியாளர் மாதை யன்,மாவட்ட பூச்சியியல் நிபுணர் முத்துமாரியப்பன், மாவட்ட தாய் சேய் நல அலுவலர் பியூலா ஏஞ்ச லின் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.