உள்ளூர் செய்திகள்
பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
தீ பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
- தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் பாபநாசத்தில் நடைபெற்றது.
- தீயணைப்பு படை அலுவலர்களும், தீயணைப்பு துறை வீரர்களும் கலந்து கொண்டனர்.
பாபநாசம்:
பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமையிலும் பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன் முன்னிலையிலும் தீ பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு பிரச்சாரம் புதிய பஸ் ஸ்டாண்ட் , பழைய பஸ் ஸ்டாண்ட், கடைவீதி மற்றும் முக்கிய இடங்களில் நடைபெற்றது.
தீ பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென வலியுறுத்தி பொது மக்களுக்கு தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணித்துறை சார்பில் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் தீயணைப்பு படை அலுவலர்களும் தீயணைப்பு துறை வீரர்களும் கலந்து கொண்டனர்.