உள்ளூர் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் போலீசாரால் கைப்பற்றப்பட்ட 422 வாகனங்கள் பொது ஏலம்- 24-ந்தேதி நடக்கிறது

Published On 2023-03-16 08:55 GMT   |   Update On 2023-03-16 08:55 GMT
  • 422 வாகனங்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • அரசின் விதிமுறை களுக்கு உட்பட்டு வருகிற 24-ந்தேதி இந்த வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

நெல்லை:

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல்லை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் உரிமம் கோரப்படாத 422 வாகனங்களில் 415 மோட்டார் சைக்கிள்களும், 7 நான்கு சக்கர வாகனங்களும் போலீ சாரால் கைப்பற்றப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அரசின் விதிமுறை களுக்கு உட்பட்டு வருகிற 24-ந்தேதி இந்த வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப் படுகிறது. ஏலத்தில் கலந்து கொள்வோர் முன்பணமாக ரூ.5 ஆயிரம் நெல்லை மாவட்ட ஆயுதப்படை வாகன பிரிவு அலுவலகத்தில் வருகிற 23-ந்தேதிக்குள் செலுத்தி டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும். வாகனத்தை வாங்குவோர் முன்னதாகவே அதனை பார்வையிட்டு செல்லலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News