விளிம்புநிலை குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்
- மாணவர்கள் கல்வி உதவித்தொகை மூலம் நன்றாக படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும்.
- மாணவர்கள் நற்பண்புகளை வளர்த்து கொள்ள வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் விளிம்புநிலை குடும்பத்தை சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ- மாணவிகளுக்கு ரூ. 1.25 லட்சம் கல்வி உதவித்தொ கை வழங்கம் நிகழ்ச்சி நாஞ்சிக்கோட்டையில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் தஞ்சை நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளை வழங்கி னார். பின்னர் அவர் பேசுகயைில்:-
மாணவர்கள் வாழ்வில் என்னவாக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதுவாக தான் மாறுவீர்கள்.
எனவே, நேர்மையான எண்ணத்துடன் கடுமையாக உழைக்க வேண்டும்.
மாணவர்கள் கல்வி உதவித்தொகை மூலம் நன்றாக படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும்.
மேலும், நற்பண்புகளை வளர்த்து கொள்ள வேண்டும் என்றார்.
கல்வி உதவித்தொகை பெற்றுக்கொண்ட மாணவ- மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஜோதி அறக்கட்டளைக்கு நன்றி தெரிவித்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
முடிவில் ஜோதி அறக்கட்டளை கள ஒருங்கிணைப்பாளர் நாராயணவடிவு நன்றி கூறினார்.