உள்ளூர் செய்திகள்
மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் திட்டம் தொடக்கம்
- ஒரு லட்சம் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
- முன்னதாக பள்ளி ஆசிரியர் பாலசுப்பிரமணியன் அனைவரயும் வரவேற்றார்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு லட்சம் மாணவர்களுக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் திட்டம் வேம்பதேவன்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தனவதி தலைமை தாங்கினார். முன்னதாக பள்ளி ஆசிரியர் பாலசுப்பிரமணியன் அனைவரயும் வரவேற்றார்.வேதாரண்யம் நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் நகர்மன்ற தலைவர் புகழேந்தி கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில் அரசு ஊழியர் சங்க முன்னாள் செயலாளர் ராமமூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் செல்வம், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஜெயந்தி, கிராம தலைவர் வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.