உள்ளூர் செய்திகள்

இரவில் வானவில் போன்று மின் விளக்குகளால் ஜொலிக்கும் மேம்பாலம்.

தென்காசியில் ஒற்றுமையை பறைசாற்றும் வானவில் மேம்பாலம்

Published On 2022-08-14 08:52 GMT   |   Update On 2022-08-14 08:52 GMT
  • தென்காசி ரயில்வே மேம்பாலம் சாதி, மதத்தை கடந்து ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.
  • காவல் துறையின் செயலை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்

தென்காசி:

தென்காசி மாவட்ட காவல்துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட வானவில் வண்ணம் கொண்ட ஒற்றுமை மேம்பாலத்தை 75-வது சுதந்திர தினவிழாவை கொண்டாடும் வகையில் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவு படி தென்காசி உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் மணி மாறன் மேற்பார்வையில் தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தென்காசி ரயில்வே மேம்பாலம் சாதி, மதத்தை கடந்து ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் மின் விளக்குகளால் அலங் கரிக்கப்பட்டது. காவல் துறையின் இத்தகைய செயலை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News