உள்ளூர் செய்திகள்

போட்டியில் வெற்றி பெற்றவர்களை படத்தில் காணலாம்.

கயத்தாறு அருகே கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

Published On 2023-06-05 08:51 GMT   |   Update On 2023-06-05 08:51 GMT
  • போட்டியில் எட்டையாபுரம்,கோவில்பட்டி உள்ளிட்ட 16 கிராமங்களில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.
  • விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் வழங்கினார்.

கயத்தாறு:

கயத்தாறு அருகே உள்ள குருமலை கிராமத்தில் பைரைட்ஸ் கிரிக்கெட் டீம் மற்றும் கிருஷ்ணா வித்தியாலயம் இனைந்து நடத்தும் கிரிக்கெட் போட்டி கயத்தாறு அருகே உள்ள குருமலை குராமத்தில் நடைபெற்றது. போட்டியினை தூத்துக்குடி மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் தொடங்கி வைத்தார். போட்டியில் எட்டையாபுரம், தோனுகால், சங்கரலிங்கபுரம், கோவில்பட்டி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட 16 கிராமங்களில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.

முதல் பரிசை மேட்டுப்பட்டி அணியும், 2-வது பரிசை குருமலை அணியும், 3-வது பரிசை கோவில்பட்டி சிக்சாக் அணி பெற்றது. பின்னர் அங்கு நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் வழங்கினார். நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள் பால்ராஜ், குருமலை கிளைச் செயலாளர் கருப்பசாமி, ஊர் நாட்டாண்மை சேகர், பஞ்சாயத்து தலைவர் விஜயகுமார் மற்றும் அருள் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News