வலுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. பரிசு வழங்கிய காட்சி.
முதல்-அமைச்சர் கோப்பைக்கான வலுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு
- மாவட்டங்களை சேர்ந்த 305 வீரர்,வீராங்கனைகள் போட்டியில்14 கலந்து கொண்டனர்.
- போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நெல்லை:
முதல்-அமைச்சர் கோப்பைக்கான வலுதூக்கும் போட்டி பாளை வ.உ.சி. மைதானத்தில் உள் விளையாட்டு அரங்கில் நேற்றும், இன்றும் நடைபெற்றது.
இதில் தமிழகம் முழுவதும் 14 மாவட்டங்களை சேர்ந்த 305 வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்டனர். சப் ஜூனியர், ஜூனியர், சீனியர், மாஸ்டர் என 4 பிரிவுகளில் 8 உட்பிரிவுகளுடன் நடந்த இந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு இன்று பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு தென் தமிழ்நாடு வலுதூக்கும் சங்க செயலாளர் சுரேஷ், மாவட்ட வலுதூக்கும் சங்க செயலாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பரிசளிப்பு நிகழ்ச்சியில் மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் எஸ்.வி.சுரேஷ், கவுன்சிலர் ரவீந்தர், வக்கீல் ராஜா முகமது மற்றும் பலர் கலந்துகொண்டனர்.