உள்ளூர் செய்திகள்

வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

Published On 2023-08-07 06:02 GMT   |   Update On 2023-08-07 06:02 GMT
  • நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக வத்தலக்குண்டு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஜெயசிங் கலந்துகொண்டு போட்டியில் வென்றவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கினார்.

வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு அருகில் உள்ள கணவாய்ப்பட்டி பர்ஸ்ட் ஸ்டெப் பப்ளிக் ஸ்கூல் சி.பி.எஸ்.இ. -பள்ளியில் பழனி, திண்டுக்கல், ஓடடன்சத்திரம் கொடைரோடு, வத்தலக்குண்டு ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக வத்தலக்குண்டு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஜெயசிங் கலந்துகொண்டு போட்டியில் வென்றவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கினார்.

சிறப்பு விருந்தினார்களாக திண்டுக்கல் கூடைப் பந்தாட்ட கழக தலைவர் செண்பக மூர்த்தி, துணை செயலாளர் மருதன் ஆகியோர் கலந்துகொண்டனர். போட்டியில் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். கயல்விழி முன்னிலை வகித்தார். ரியா அருண், கார்த்திகா, ஆஷித்தா, ஹேமாஸ்ரீ உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News