உள்ளூர் செய்திகள்

குட்டையில் மூழ்கி தனியார் ஊழியர் சாவு

Published On 2023-04-29 15:23 IST   |   Update On 2023-04-29 15:23:00 IST
  • ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
  • குட்டையில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி,

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் பாலாஜி (வயது 32). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

சம்பவத்தன்று தன்னுடைய சொந்த ஊருக்கு செல்வதற்காக கிருஷ்ணகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வழியில் கை கால் கழுவதற்காக அங்குள்ள குட்டையில் இறங்கி உள்ளார். அப்போது நிலை தடுமாறி தண்ணீர் உள்ளே விழுந்ததில் குட்டையில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

Tags:    

Similar News