உள்ளூர் செய்திகள்

பேராவூரணி பகுதியில் நாளை மின்தடை

Published On 2023-11-17 09:54 GMT   |   Update On 2023-11-17 09:54 GMT
  • துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

பேராவூரணி:

பேராவூரணி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை நவம்பர் 18-ந்தேதி (சனிக்கிழமை) பேராவூரணி நகர் பகுதி, கொன்றைக்காடு, குருவிக்கரம்பை, பூக்கொல்லை, கழனிவாசல், ரெட்டவயல், பெருமகளூர், திருவத்தேவன், குப்பத்தே வன், உடையநாடு, சேதுபாவாசத்திரம், மல்லிபட்டினம், மரக்கா வலசை, நாடியம், பள்ளத்தூர், கள்ளம்பட்டி, செருபா லக்காடு, ஒட்டங்காடு, கட்டயங்காடு, திருச்சிற்ற ம்பலம், துறவிக்காடு, சித்துக்காடு, வா.கொல்லைக்காடு, குறிச்சி, ஆவணம், சாணாகரை, பைங்கால், படப்பனார்வயல், மணக்காடு, பட்டத்தூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மின்தடை தொடர்பான புகார்களுக்கு 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் என பேராவூரணி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News