கண்டமங்கலம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
- உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளது.
- காலை 10மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.
விழுப்புரம்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் எம்.சிவகுரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கோட்டத்தை சேர்ந்த கண்டமங்கலம். துணை மின்நிலையத்தில் இருந்து பள்ளித்தென்னல் செல்லும் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (வியாழக்கிழமை )காலை 10மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இதனால் கண்டமங்கலம், பள்ளித்தெ ன்னல், நவமால்மருதூர், நவமால்கா ப்பேரிஉள்ளிட்ட 4 கிராமங்களுக்கும் மின்சாரம் நிறுத்தப்படும்.
இதேப்போல சொர்ணாவூர் துணை நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் மற்றும் பரசுரெட்டிபாளையம் உயர ழுத்த மின்பாதை களில் பராமரிப்பு பணி கள் மேற்கொள்ள இரு ப்பதால் ராம்பாக்கம், கொங்கம்பட்டு, ஆர்.ஆர்.பாளையம், சொக்க ம்பட்டு, மேட்டு ப்பாளையம், குச்சிபாளையம், பரசுரெட்டி பாளையம் ஆகிய 7 கிராமங்க ளுக்கும் மின் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.