உள்ளூர் செய்திகள்
ஆறுமுகநேரியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் சீரமைக்கப்பட வேண்டும் - வியாபாரிகள் சங்கம் கோரிக்கை
- ஆறுமுகநேரி வியாபாரிகள் ஐக்கிய சங்கத்தின் செயற்குழு கூட்டம் சங்க அலுவல கத்தில் நடைபெற்றது
- பொருளாளர் ராஜாராம் வரவு-செலவு அறிக்கையை வாசித்தார்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி வியாபாரிகள் ஐக்கிய சங்கத்தின் செயற்குழு கூட்டம் சங்க அலுவல கத்தில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார். துணை செயலாளர் ஆதிசேஷன் முன்னிலை வகித்தார்.
பொருளாளர் ராஜாராம் வரவு-செலவு அறிக்கையை வாசித்தார். நிர்வாக குழு உறுப்பினர்கள் பூபால் ராஜன், சண்முக வெங்க டேசன், பாஸ்கரன், பாலமுருகன், அழகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஆறுமுகநேரி பகுதியில் அடிக்கடி நடக்கும் மின் தடையை தவிர்க்க வேண்டும்.மேலும் பல இடங்களில் மின் கம்பிகளில் தொய்வு ஏற்பட்டு தாழ்வாக கிடப்ப தால் அதனால் விபத்து ஏதும் நடந்து விடாமல் இருக்க அதனை உடனடி யாக சீரமைக்க வேண்டும் என்றும் மின் சாரத்துறை அதிகாரி களை வலியு றுத்தி தீ ர்மா னங்கள் நிறைவேற் றப்பட்டன.