உள்ளூர் செய்திகள்

பூங்காளம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்.

பூங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-07-09 09:44 GMT   |   Update On 2022-07-09 09:44 GMT
  • விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் போன்ற வழிபாடுகளுடன் யாகசாலை பூஜை தொடங்கியது.
  • கோபுர கலசத்துக்கு புனித நீரால் கும்பாபிஷேகம் நடைபெற்று, பின் பூங்காளம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம், கீழையூர் ஒன்றியம், கீழப்பிடாகையில் அமைந்துள்ள பூங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் போன்ற வழிபாடுகளுடன் யாகசாலை பூஜை தொடங்கியது. யாகசாலை பூஜை நிறைவடைந்ததும், மகா பூா்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது.

பின்னா், கோயிலின் கோபுர கலசத்துக்கு புனித நீரால் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, பூங்காளம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

Tags:    

Similar News