உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சி : தாலிக்கயிற்றால் இறுக்கி பெண்ணை கொல்ல முயன்ற கள்ளக்காதலன்

Published On 2023-11-13 09:08 GMT   |   Update On 2023-11-13 09:08 GMT
மற்றொரு வாலிபருடன் உல்லாசமாக இருந்ததால் ஆத்திரம்

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த வர் 26 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 8 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில் கணவன்- மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து இளம்பெண் தனது கணவரை பிரிந்து கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வரு கிறார். இளம்பெண்ணுக்கு கேரள மாநிலம் கோழிக்கோ ட்டை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. பின்னர் இளம்பெண் அவரது மகளுடன் வாடகை வீட்டில் கள்ளக்காதலனுடன் கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு சேலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கள்ளக்காதலன் வீட்டில் இல்லாத நேரத்தில் இளம்பெண் வாலிபரை தனது வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலன் வேலை விஷயமாக வெளியூருக்கு சென்று இருந்தார். அப்போது இளம்பெண் வாலிபரை தனது வீட்டிற்கு அழைத்து அவருடன் இரவு முழுவதும் ஜாலியாக இருந்தார்.

மறுநாள் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய காதலனுக்கு அக்கம் பக்கத்தினர் மூலம் இந்த கள்ளக்காதல் விவகாரம் தெரிய வந்தது.

இதில் ஆத்திரம் அடைந்த அவர் இளம்பெண்ணை கண்டித்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த காதலன், இளம்பெண் கழுத்தில் அணிந்து இருந்த தாலி கயிற்றால் இறுக்கி அவரை கொலை செய்ய முயன்றார். அப்போது அவரிடம் இருந்து தப்பிய இளம்பெண் இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News