பெண் போலீசின் கணவர் தூக்கு போட்டு தற்கொலை
- உடற்பயிற்சி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
- 3 முறை தற்கொலைக்கு முயன்றார்.
கோவை,
கோவை இருகூர் அருகே உள்ள ஏ.ஜி.புதூரை சேர்ந்தவர் சதீஷ் (வயது 31).
இவர் தனியார் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி ராஜலட்சுமி. பெண் போலீசாக உள்ளார். இவர்கள் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
மது பழக்கத்துக்கு அடிமையான சதீஷ் மனவேதனை அடைந்து ஏற்கனவே 3 முறை தற்கொலைக்கு முயன்றார். அவரை அவரது உறவினர்கள் காப்பாற்றினர்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த சதீஷ் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட உடற்பயிற்சி ஆசிரியர் சதீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.