உள்ளூர் செய்திகள்

டவுன் காட்சி மண்டபம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட காட்சி.

நெல்லையில் விதி மீறி சென்ற வாகன ஓட்டிகளுக்கு போலீசார் எச்சரிக்கை

Published On 2022-10-29 09:32 GMT   |   Update On 2022-10-29 09:32 GMT
  • நெல்லை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி வாகனங்கள் ஓட்டி செல்வோர்களை போலீசார் மடக்கி பிடித்து வருகின்றனர்.
  • வாகன ஓட்டிகள் மது குடித்துள்ளார்களா எனவும் சோதனை செய்தனர்.

நெல்லை:

திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி வாகனங்கள் ஓட்டி செல்வோர்களை போலீ சார் மடக்கி பிடித்து வருகின்றனர்.

இன்றும் மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். பேட்டை காட்சி மண்டபம், டவுன், ஸ்ரீபுரம், சந்திப்பு, வண்ணார்பேட்டை, சமாதானபுரம், மார்க்கெட், தச்சநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிளில் சென்ற வர்களை கண்காணி த்தனர்.

அப்போது ஹெல்மெட் அணியாமலும், செல்போன் பேசிக் கொண்டு சென்றவர்களை பிடித்து எச்சரிக்கை செய்தனர்.

நெல்லை மாநகர பகுதியில் பெரும்பாலும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தும், இனி இதுபோன்று வந்தால் 10 மடங்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவுறுத்தினர். ஒரு சில இடங்களில் மட்டும் அபராதம் விதிக்கப்படுகிறது. டவுன் காட்சி மண்டபம் பகுதியில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்தவர்களிடம் ஓட்டுனர் உரிமம், இன்சூரன்ஸ் உள்ளிட்டவைகளை சரிபார்த்தனர். மேலும் வாகன ஓட்டிகள் மது குடித்துள்ளார்களா எனவும் சோதனை செய்தனர். மது குடித்து சென்றவர்களுக்கு புதிய சட்டத்தின்படி 10 மடங்கு அபராதம் வசூலித்தனர்.

Tags:    

Similar News