உள்ளூர் செய்திகள்
துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
- ரெயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருடன் திருப்பூர் மாநகர போலீஸ் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் :
அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் காரணமாக நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருப்பூர் ெரயில் நிலையத்திலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருடன் திருப்பூர் மாநகர போலீஸ் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் இன்று முதல் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.