உள்ளூர் செய்திகள்

நெல்லை தொழிலாளி கொலையில் மேலும் ஒருவருக்கு வலைவீச்சு

Published On 2022-08-08 10:02 GMT   |   Update On 2022-08-08 10:02 GMT
  • கடந்த 5 நாட்களுக்கு முன்பு பாளை பெருமாள்புரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்தது தெரியவந்தது.
  • நிவாரணமாக ரூ.6 லட்சத்தை அவரது பெற்றோரிடம் ஆர்.டி.ஓ. சந்திரசேகர் வழங்கினார்.

நெல்லை:

நெல்லை தச்சநல்லூர் பால்கட்டளை பகுதியை சேர்ந்தவர் பேச்சி ராஜா(வயது 26). கட்டிட தொழிலாளி.

இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றபோது 3 பேர் கும்பல் அவரை சரமாரி வெட்டிக்கொலை செய்தது. இதுதொடர்பாக தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில், கடந்த 2020-ம் ஆண்டு கரையிருப்பை சேர்ந்த மாசானமூர்த்தி என்பவர் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக அவரது நண்பர்கள் திட்டம் தீட்டி பேச்சிராஜாவை கொலை செய்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக மானூர் அருகே வேப்பங்குளத்தை சேர்ந்த ராஜவேலு(வயது 30), சுதர்சிங்(30), தச்சநல்லூர் கரையிருப்பை சேர்ந்த ஹரி நாராயணன்(20) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் மாசான மூர்த்தியின் தந்தை சுடலைமுத்து(65) கொலையாளிகள் 3 பேருக்கும் கடந்த 5 நாட்களுக்கு முன்பு பாளை பெருமாள்புரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்தது தெரியவந்தது.

அவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் கொலையாளிகள் 3 பேருக்கும் மோட்டார் சைக்கிள் கொடுத்து உதவிய பாளை மனக்காவலம்பிள்ளை நகரை சேர்ந்த மாரிமுத்து என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே பேச்சி ராஜாவின் உடல் நேற்று அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து நிவாரணமாக ரூ.6 லட்சத்தை அவரது பெற்றோரிடம் ஆர்.டி.ஓ. சந்திரசேகர் வழங்கினார்.

Tags:    

Similar News