உள்ளூர் செய்திகள்

5 வாலிபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை

Published On 2023-05-19 07:04 GMT   |   Update On 2023-05-19 07:04 GMT
  • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே வடகரையாத்தூர் ஊராட்சி வி.கரப்பா ளையம் பகுதியில் கடந்த மார்ச் 11-ந் தேதி இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.
  • போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி உண்மை யான குற்றவாளி களை கைது செய்ய வேண்டும் என ஜேடர்பா ளையம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே வடகரையாத்தூர் ஊராட்சி வி.கரப்பா ளையம் பகுதியில் கடந்த மார்ச் 11-ந் தேதி இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டைகையில் பணிபு ரிந்து வந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும், வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக்கோரியும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், வட மாநில தொழி லாளர்கள் பணிபுரியும் வெல்ல ஆலை கொட்ட கைகள், டிராக்டர்கள், குடிசைகள், பள்ளி பஸ் போன்றவற்றிற்கு தீ வைப்பு சம்பவங்களும் நடந்து வந்தது.

இதையடுத்து, ஜேடர்பா ளையம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி இரவு, வி.புதுப்பாளையம் பகுதியில் முத்துசாமி என்பவரது வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகையில் தூங்கிய வட மாநில தொழிலா ளர்கள் 4 மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றவர்கள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த பரபரப்பு அடங்கு வதற்குள், நேற்று முன்தினம் இரவு ஜேடர்பா ளையம் பகுதியைச் சேர்ந்த முரு கேசன் என்ப வர் தோப்பில் இருந்த 600-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் மற்றும் சில பாக்கு கன்றுகளை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர். வாழை தோப்பின் உரிமையாள ரான முருகேசன், முத்துசாமியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தகவல் அறிந்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமை யிலான போலீசார் விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர். மேலும் மொளசி மற்றும் ஜேடர்பா ளையம் பகுதிகளை சேர்ந்த, படுகொலை செய்யப்பட்டு இளம்பெண்ணின் சமூகத்தை சேர்ந்த 5-க்கும் மேற்பட்ட இளைஞர்களை பிடித்து, போலீசார் ரகசிய இடத்தில் வைத்து நேற்று இரவு முதல் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே வட மாநில தொழிலாளர்கள் மீது தீ வைத்த சம்பவத்தன்று, நள்ளிரவு 2.30 மணி அளவில் கரப்பாளையம் பகுதியில் குடியிருக்கும் கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் உறவினர்கள் வீடுகளுக்கு சென்ற போலீசார், அங்கு தூங்கிக் கொண்டிருந்த வர்களை தட்டி எழுப்பி, அவர்களது கைகள், துணி, உடலை நுகர்ந்து பார்த்து சோதனை செய்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி யடைந்த அவர்கள், ஏன் எங்கள் சமூகத்தை மட்டும் குறி வைத்து இது போன்ற தேவையற்ற முறையில் தொந்தரவு செய்கிறீர்கள்? என்று போலீசாரிடம் கேட்டனர். ஆனால் போலீ சார் அதற்கு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

இப்பகுதியில் எந்த அசம்பாவித சம்பவங்கள் நடந்தாலும் படுகொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் சமூ கத்தை சேரந்தவர்களை மட்டும் குறிவைத்து சம்பந்தப்பட்ட வழக்கு களில் கைது செய்து சிறை யில் அடைத்து வருவதாக கரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் போலீசார் மீது குற்றம் சுமத்துகின்றனர்.

போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி உண்மை யான குற்றவாளி களை கைது செய்ய வேண்டும் என ஜேடர்பா ளையம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது போன்ற தவறான செயல்பாடுகளால் பொதுமக்கள் போலீசார் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழந்து விடு கின்றனர். இதனால் தேவை யற்ற போராட்டங்களை போலீ சார் சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்றனர்.

Tags:    

Similar News