உள்ளூர் செய்திகள்
போலீசார் சோதனையில் சிக்கினர்:கடைகளில் பாதுகாப்பின்றி பட்டாசு வைத்து இருந்த 2 பேர் கைது
- பட்டாசுகளை எந்தவித பாதுகாப்பும் இன்றி வைத்திருந்தது தெரியவந்தது.
- பட்டாசுகளை பாதுகாப்பு இன்றி வைத்திருந்ததாக மனோகரன் (வயது 40), பிரேம்குமார் (43) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி போலீசார் சந்தூர் பகுதியில் ரோந்து சென்றனர். அந்த பகுதியில் உள்ள 2 கடைகளில் சோதனை செய்தபோது அதில் பட்டாசுகளை எந்தவித பாதுகாப்பும் இன்றி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பட்டாசுகளை பாதுகாப்பு இன்றி வைத்திருந்ததாக மனோகரன் (வயது 40), பிரேம்குமார் (43) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.