நீலகிரிக்கு வருகை தரும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுரை
- நீலகிரியில் மழை பெய்து வருவதால் ஆபத்தான வளைவுகளில் வாகனங்கள் சிக்கி அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றன.
- சுற்றுலா வாகன ஓட்டிகள் மலைப்பாதையில் பயணிக்கும் போது போக்குவரத்து நெறிமுறைகளை பின்பற்றிட வேண்டும்.
அரவேணு:
நீலகிரி மாவட்டத்திற்கு வெளியூர் மற்றும் வெளி மாநில, மாவட்ட சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை புரிகின்றனர்.
தற்போது நீலகிரியில் மழை பெய்து வருவதால் ஆபத்தான வளைவுகளில் வாகனங்கள் சிக்கி அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றன. இதுபோன்ற விபத்துகள் நடைபெறாமல் இருக்க போலீசார் தொடர்ந்து வாகன ஓட்டிகளுக்கு அறிவுரைகள் வழங்கி வருகிறார்கள்.
இதேபோல கோத்தகிரி போக்குவரத்து இன்ஸ்சபெக்டர் சரவணக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஜான் வாகனங்களை நிறுத்தி தேவையான அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.
சுற்றுலா வாகன ஓட்டிகள் மலைப்பாதையில் பயணிக்கும் போது போக்குவரத்து நெறிமுறைகளை பின்பற்றிடவும், வாகனத்தை இரண்டாவது கியரில் இயக்கவும், மிகக்குறுகிய வளைவுகளில் ஒலி எழுப்பி வாகனத்தை குறிப்பிட்ட வேகத்தில் இயக்கவும் கோத்தகிரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையிலான போலீசார் அறிவுறுத்தினர்.