உள்ளூர் செய்திகள்

வடலூரில் போலீஸ் அதிரடி: லாரியில் இரும்பு பொருட்கள் கடத்திய 2 பேர் கைது

Published On 2022-10-09 13:18 IST   |   Update On 2022-10-09 13:18:00 IST
  • வடலூரில் போலீஸ் லாரியில் இரும்பு பொருட்கள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • ஆண்டார் முள்ளிபள்ளம்பாலக்குமார் தப்பி ஓடிவிட்டார்.

கடலூர்:

வடலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் போலீசார் வடலூர் 4 முனை ரோட்டில் அதிகாலை 5 மணிக்கு வாகன தணிக்கை செய்தனர் . அப்போது மினி லாரியில் வந்தவர்களை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் ஆண்டார் முள்ளி பள்ளம் அம்பேத்கார் நகர் இளையபெருமாள் (வயது34) பெரியப்பட்டு பாண்டியன் தமிழரசன்(36) ஆகியோர் என தெரியவந்தது.

இவர்களுடன் வந்த ஆண்டார் முள்ளிபள்ளம்பா லக்குமார் தப்பி ஓடிவிட்டார். லாரியில் கடத்திய இரும்பு பொருட்கள் கடலூரில்மூடிக்கிடக்கும் கம்பெனி இரும்புஎந்திரங்கள் எனவும் இதன்மொத்த எடை,3.5 டன் என்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News