உள்ளூர் செய்திகள்
- தோழி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி, மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
- எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால், அவர் மாயமானது தெரியவந்தது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் சேத்த னஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் 17வயது சிறுமி. இவர் கே.என்.சவுளூரில் தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்து வந்தார். இந்த சிறுமி தருமபுரியில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த மாதம் 29-ந் தேதி தோழி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி, மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் உறவினர்கள் வீடுகளில் சிறுமியை தேடிபார்த்தனர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால், அவர் மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து சிறுமியின் தாய் தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியை தேடிவருகின்றனர்.