உள்ளூர் செய்திகள்
சங்கரன்கோவில் நகராட்சியில் தூய்மை நகர மக்கள் இயக்க உறுதிமொழி
- சங்கரன்கோவில் நகராட்சியில் சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன் தலைமையில் தூய்மை நகருக்கான மக்கள் இயக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது.
- நிகழ்ச்சியில் மகளிர் குழு தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்கள், பொதுமக்கள், மாணவ- மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் நகராட்சி சார்பில் சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன் தலைமையில் தூய்மை நகருக்கான மக்கள் இயக்க உறுதிமொழி எடுக்கப்பட்டு ஊர் குளத்தை சுத்தம் செய்யும் பணியை பார்வையிட்டனர். மேற்கண்ட பணிகளை நகராட்சி சுகாதார அலுவலர் பாலச்சுந்தர் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் மாரிச்சாமி, மாரிமுத்து, கருப்பசாமி, வெங்கட்ராமன், தூய்மை திட்ட பணியாளர்கள் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் மகளிர் குழு தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்கள், பொதுமக்கள், மாணவ- மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.