உள்ளூர் செய்திகள்

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Published On 2023-08-18 09:21 GMT   |   Update On 2023-08-18 09:21 GMT
  • மாணவ- மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.
  • பேரணியானது தலைஞாயிறு பள்ளியில் இருந்து தொடங்கி பேரூராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

ஊர்வலத்தை பேரூராட்சி தலைவர் செந்தமிழ் செல்வி பிச்சையன் தொடங்கி வைத்தார்.

பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார்.

முன்னதாக இளநிலை உதவியாளர் குமார் அனை வரையும் வரவேற்றார்.

ஊர்வலமானது தலைஞாயிறு மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கி சின்ன கடற்கரை, மேலத்தெரு அக்ரஹரம், பஸ் நிலையம் வழியாக பேரூராட்சி அலுவலகம் சென்றடைந்தது.

இதில் மாணவ- மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.

இதில் ஏராளமான பொதுமக்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News