உள்ளூர் செய்திகள்

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

Published On 2023-08-24 15:27 IST   |   Update On 2023-08-24 15:27:00 IST
  • மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.சரவணன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்து தொடங்கி வைத்தார்.
  • தமிழக அரசின் காலை உணவு திட்டத்தில், மாதிரி உணவு தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 பாப்பிரெட்டிப்பட்டி,

தருமபுரி மாவட்டம், பாப்பி ரெட்டிப்பட்டி , பையர்நத்தம் அரசு மருத்துவ மனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.சரவணன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்து தொடங்கி வைத்தார்.

மேலும் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தில், மாதிரி உணவு தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பொதுமக்களுக்கு பல்சுவை உணவுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பையர் நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தா குப்புசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் கண்ணன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சிவகாமி செல்வம், பள்ளி ஆசிரியர்கள், சுகாதார மைய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News