உள்ளூர் செய்திகள்

பனை விதைகள் நடும் பணியை நகராட்சி ஆணையர் ஹேமலதா தொடங்கி வைத்தார்.

பனை விதைகள் நடும் பணி தொடக்கம்

Published On 2022-10-09 09:23 GMT   |   Update On 2022-10-09 09:23 GMT
  • இடர்பாடுகள் ஏற்படும்போது இயற்கை அரணாக விளங்கும் பனைமரங்களை உருவாக்கும் முயற்சி.
  • நகராட்சி மூலம் கடற்கரை முழுவதும் இந்த பணி மேற்கொள்ளப்பட்டது.

வேதாரண்யம்:

வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் புயல், வெள்ளம், மற்றும் பல்வேறு இயற்கை இடர்பாடுகள் ஏற்படும்போது இயற்கை அரணாக விளங்கும் பனைமரங்களை உருவாக்கும் முயற்ச்சியில் 20 ஆயிரம் பனை விதைகளை நடும்பணியை துவக்கினர்

நிகழ்ச்சியில் பனைவிதை நடும்பணியினை நகராட்சி ஆணையர் ஹேமலாதா துவக்கிவைத்தார் நிகழ்ச்சியில்நகர் மன்ற தலைவர் புகழேந்தி துணை தலைவர் மங்களநாயகி நகராட்சி பொறியாளர் முகமது இப்ராஹீம்,

ஓவர்சியர் குமரன் மற்றும்நகர் மன்ற உறுப்பினர்கள் தேத்தாகுடி சாரதா மெட்ரிக் பள்ளி மாணவ - மாணவிகள் கலந்துகொண்டனர். வேதாரண்யம் பகுதியின் சுற்றுசூழல் இயற்கை வளங்களை மேம்படுத்தும் வகையில் நகராட்சி மூலம் கடற்கரை முழுவதும் இந்த பணி மேற்கொள்ளபட்டது என நகராட்சி ஆணையர் ஹேமலாதா தெரிவித்தார்.

Tags:    

Similar News