உள்ளூர் செய்திகள்
உபதலையில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் எந்திரம் சோதனை ஓட்டம்
- மக்கும் குப்பைகளைக்கொண்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்க மக்கும் குப்பைகளை பிரிப்பதற்கு எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
- கிராமத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உபதலை ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்தார்.
ஊட்டி:
உபதலை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் சுமார் 27.25 லட்சம் மதிப்பீட்டில் மக்கும், மக்காத குப்பைகளை பிரிக்க கூடாரம் அமைத்து மக்கும் குப்பைகளைக்கொண்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்க மக்கும் குப்பைகளை பிரிப்பதற்கு எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த எந்திரத்தின் சோதனை ஒட்டம் தொடங்கியது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர், உதவியாளர் ஜெயந்தி, தூய்மைபாரத ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ், ஊராட்சி செயலாளர் சுரேஷ்குமார், உபதலை ஊராட்சிமன்ற தலைவர் சி.பாக்கியலட்சுமி சிதம்பரம் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
அனைத்து வார்டு உறுப்பினர்களையும் தூய்மை காவலர்களையும் அழைத்து எந்திரத்தை இயக்கி, கிராமத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உபதலை ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்தார்.