உள்ளூர் செய்திகள்

பூச்சி மருந்து குடித்து தொழிலாளி தற்கொலை

Published On 2022-08-10 14:04 IST   |   Update On 2022-08-10 14:04:00 IST
  • பூச்சி மருந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
  • மது குடிக்க மனைவி பணம் தராததால்

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூரில் வசித்து வருபவர் நடராஜ் (வயது 36), தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் தனது மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுத்து உள்ளார். இதனால் மன வேதனை அடைந்த நடராஜ் வயலுக்கும் அடிக்கும் பூச்சி மருந்தை குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜ் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

Tags:    

Similar News