உள்ளூர் செய்திகள்

லாரி மோதி பெண் பலி

Published On 2022-11-25 15:25 IST   |   Update On 2022-11-25 15:25:00 IST
  • லாரி மோதி பெண் பலியானார்.
  • மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 52). இவர் தனது மகன் இந்திரஜித் என்பவருடன் பாடாலூர் சந்தை பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு தனது வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த இந்திரஜித்தை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News