உள்ளூர் செய்திகள்

வீட்டை விட்டு வெளியே சென்ற விவசாயி மாயம்

Published On 2022-11-26 15:09 IST   |   Update On 2022-11-26 15:09:00 IST
  • வீட்டை விட்டு வெளியே சென்றவிவசாயி மாயமானார்.
  • மனைவி போலீசில் புகார்

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பெரியம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணுசாமி(வயது 44). விவசாயி. இவர் கடந்த 22-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர். பின்னர் மீண்டும் அவர் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி அமுதா உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அரும்பாவூர் போலீசில் அமுதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கண்ணுசாமியை வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News