ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
- ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது
- வேப்பூர் யூனியன் வட்டத்திற்குட்பட்ட
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
புதுவேட்டக்குடி ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் தலைவர் செல்வி தர்மலிங்கம், துணை தலைவர் ராஜ்குமார், ஊராட்சி செயலாளர் தேவேந்திரன் தலைமையில் நடைபெற்றது. ஒகளூர் ஊராட்சியில் மன்ற தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய கவுன்சிலர் ஆண்டாள் குடியரசு, துணைத் தலைவர் அண்ணாதுரை உட்பட பலர்கலந்து கொண்டனர்.
அகரம்சீகூர் ஊராட்சியில் தலைவர் முத்தமிழ்ச்செல்வன், துணைத் தலைவர் இந்துமதி தர்மராஜ் , ஊராட்சி செயலர் சுமதி செல்வம் ஆகியோர் முன்னிலையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது . கீழப்புலியூர் ஊராட்சியில் தலைவர் சாந்தி செல்வராஜ், துணைத்தலைவர் ரேவதி சரவணன், ஊராட்சி செயலர் பழனிவேல் தலைமையிலும், திருமாந்துறை ஊராட்சி மன்ற தலைவர் வேளாங்கண்ணி , துணைத் தலைவர் சக்திவேல், ஊராட்சி செயலர் முருகதாஸ் தலைமையிலும் வடக்கலூர் ஊராட்சி மன்ற தலைவர் ராமகிருஷ்ணன், துணைத் தலைவர் கணேசன், ஊராட்சி செயலர் மல்லிகா ஆகியோர் முன்னிலையில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது .
இதேபோல் கீழப்பெரம்பலூர் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா காமராஜ், துணைத்தலைவர் செல்வராணி, ஊராட்சி செயலர் சட்டநாதன் தலைமையிலும், வயலப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் உமா பரமசிவம், துணைத்தலைவர் செந்தில் , ஊராட்சி செயலர் சீனிவாசன் தலைமையிலும்
துங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வமணி அழகுதுரை, துணைத்தலைவர் பார்வதி, ஊராட்சி செயலர் ரமேஷ் தலைமையிலும், கொளப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் வேல்முருகன், துணைத் தலைவர் அன்பரசு, ஊராட்சி செயலர் ராஜேந்திரன் தலைமையிலும்,
அத்தியூர் ஊராட்சியில் தலைவர் பாலசுந்தரம், கிளர்க் முருகதாஸ் முன்னிலையில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
பெண்ணகோணம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி, ஊராட்சி செயலர் சுதா தலைமையிலும், பெருமத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், ஊராட்சி செயலர் சுகந்திரா தலைமையிலும் நடைபெற்றது.