உள்ளூர் செய்திகள்

போலீசாரின் சிறப்பு விசாரணை முகாம்

Published On 2023-06-23 12:42 IST   |   Update On 2023-06-23 12:42:00 IST
  • போலீசாரின் சிறப்பு விசாரணை முகாமில் 27 மனுக்கள் பெறப்பட்டன.
  • போலீசாரின் சிறப்பு விசாரணை முகாம் நடைபெற்றது

பெரம்பலூர்:

போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் நடந்தது. முகாமிற்கு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் தலைமையிலான போலீசார் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்றனர். இதில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்தம் 27 மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு மனு விசாரணை முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம், என்று கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

Tags:    

Similar News