உள்ளூர் செய்திகள்

பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் நடந்த புகைப்படக்கண்காட்சி நிறைவு விழா

Published On 2023-01-25 12:39 IST   |   Update On 2023-01-25 12:39:00 IST
  • பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் நடந்த புகைப்படக்கண்காட்சி நிறைவு விழா நடந்தது
  • சிறப்பாக அரங்குகள் அமைத்தவர்களுக்கு கலெக்டர் பாராட்டு

பெரம்பலூர்:

தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களை பொது–மக்களுக்கு விளக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் பொங்கல் திரு–நாளை முன்னிட்டு பெரம்ப–லூர் பாலக்கரை பகுதியில், கடந்த 14-ந்தேதி புகைப்பட கண்காட்சி தொடங்கியது.இதில் அரசின் மக்கள் நலத்திட்டங்களை பொது–மக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையி–லான புகைப்படங்கள் காட்சிப் படுத்தப்பட்டது.

அதுமட்டு–மல்லாது, பெரம்ப–லுார் மாவட்டத்தில் நடை–பெற்ற முக்கிய அரசுத் திட்டங் களின் தொகுப்பும் புகைப்ப–டங்களாக இடம் பெற்றது. புகைப்பட க்கண்காட்சி–யினை பார்வையிட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் பாரம்ப–ரிய உணவுத் திருவிழா, மகளிர் திட்டத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் தயாரித்த உணவுப்பொருட்கள், மூலி–கைத் தேநீர் பொடி உள்ளிட்ட பொருட்கள் பொதுமக்க–ளின் பார்வைக்கும் விற்ப–னைக்கும் வைக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களின் தொகுப்பாக புத்தகக்காட்சி அரங்கு அமைக்கப்பட்டது. ஏராளமான கவிஞர்கள், எழுத்தாளர்களின் புத்த–கங்கள் காட்சிப்ப–த்தப்பட்டு, சலுகை விலையில் விற்ப–னைக்காகவும் வைக்கப்பட்டது. மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக அளவில் விளையும் மக்காச்சோ–ளத்தில் செய்யப்படும் உணவுப்பொருட்களை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

நெகிழி பயன்பாட்டை தவிர்க்க வேண்டும், நெகிழி பொருட்களுக்கான மாற்று பொருட்கள் என்னென்ன கிடைக்கின்றது என்பது குறித்து பொதுமக்களுக்கு விளக்கும் வகையிலான விழிப்புணர்வு அரங்கு, ஆவின் பொருட்களின் விற்பனை அரங்குகளும் அமைக்கப்பட்டது. நிறைவு நாளான நேற்று நிறைவு நாளான நேற்று கலெக்டர் ப.ஸ்ரீவெங்கட–பிரியா, பெரம்பலுார் எம்.எல்.ஏ. பிரபாகரன் ஆகியோர் புகைப்பட கண்காட்சியினை பார் வை–யிட்டு சிறப்பாக அரங்குகள் அமைத்த துறை அலுவ–லர்களுக்கு நினைவுப்பரிசுகளை வழங்கி பாராட்டி–னர்.

சிறப்பாக அரங்குகள் அமைத்த துறை அலுவலர்களுக்கு கேடயங்களும் வழங்கப்பட் டன. முன்னதாக செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பாவேந்தன் வரவேற்றார். நிகழ்ச்சி முடிவில் உதவி மக்கள் தொடர்பு அலு–வலர் (செய்தி) எம்.எஸ்.மகாகிருஷ்ணன் நன்றி கூறினார். இந்நிகழ்வில் முதன்மைக்கல்வி அலுவ–லர் அறிவழகன், தோட்டக்க–லைத்துறை துணை இயக்குநர் இந்திராணி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சுகந்தி, வட்டார குழந்தை வளர்ச்சி அலுவலர்கள் பிரேமா, பூமா, திருமதி அருணா உட்பட அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News