உள்ளூர் செய்திகள்

கோடையில் வாடும் பறவை இனங்களுக்கு தண்ணீர் வழங்கிய பெரம்பலூர் எஸ்.பி. ஷியாமளா தேவி

Published On 2023-04-23 11:29 IST   |   Update On 2023-04-23 11:29:00 IST
  • பெரம்பலூர் எஸ்.பி. ஷியாமளா தேவி கோடையில் வாடும் பறவை இனங்களுக்கு தண்ணீர் வழங்கினார்
  • பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகாரித்துக் கொண்டே வருகின்றது.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகாரித்துக் கொண்டே வருகின்றது. இந்நிலையில் மனிதர்கள் கோடை வெப்பத்திலிந்து தங்களை தற்காத்துக்கொள்ள பழங்கள் உட்கொள்வது குளிர்பானங்கள் அருந்துவது போன்ற பல்வேறு முறையில் வெப்பத்தை தணித்துக் கொள்கிறார்கள். மேலும் கோடை வாசஸ்தலங்களுக்கும் பயணம் மேற்கொள்கிறார்கள்.ஆனால் பறவை இனங்களோ கோடை வெயிலின் தாக்கத்தினை தணித்துக் கொள்ள முடியாமல் இருந்து வருகின்ற நிலையில் பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தின் வளாகத்தில் சுமார் 100 மரங்கள் உள்ளன. இங்கு பல்வேறு வகையான பறவைகள் கூடு கட்டி வாழ்ந்து வருகின்றன.

மேற்படி பறவைகளின் கோடை காலத்தினை கருத்தில் கொண்டு பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்மு ஷியாம்ளா தேவி பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள அனைத்து மரங்களிலும் பறவைகள் எளிதில் அமர்ந்து தண்ணீர் குடிக்கவும், தானியங்களை உண்ணவும் 28 மரங்களில் தண்ணீர் பாட்டில்களையும் 14 மரங்களில் தானிய உணவுகளையும் வைத்துள்ளார்.மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் அதன் சுற்றியுள்ள மரங்களில் பறவைகள் கோடை வெயிலில் தண்ணீர் குடிக்கவும் தானியங்கள் உண்ணவும் வழிவகை செய்துமாறு அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News