உள்ளூர் செய்திகள்

லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-10-21 14:56 IST   |   Update On 2022-10-21 14:56:00 IST
  • லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
  • மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 49), லாரி டிரைவர். இவருக்கு கமலா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். வழக்கம் போல் நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து பன்னீர்செல்வம் வீட்டிற்கு வந்தார். பின்னர் குளியலறைக்கு சென்ற பன்னீர்செல்வம் வெகு நேரமாகியும் திரும்ப வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் குளியலறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பன்னீர்செல்வம் கைலியால் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பன்னீர்செல்வம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பன்னீர்செல்வம் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

Tags:    

Similar News