உள்ளூர் செய்திகள்

சாராயம் விற்றவர் கைது

Published On 2023-02-27 11:52 IST   |   Update On 2023-02-27 11:52:00 IST
  • 5 லிட்டர் சாராயம், டூவீலர் பறிமுதல்
  • சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் செந்தமிழ்ச்செல்வி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது வேப்பந்தட்டை தாலுகா, வெள்ளுவாடியில் அங்காளம்மன் கோவில் அருகே அரசால் தடை செய்யப்பட்ட சாராயத்தை விற்பனை செய்து கொண்டிருந்த பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மனோகரன் மகன் சூர்யாவை (வயது 22) போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். முன்னதாக அவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயம் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. அதே இடத்தில் சாராயம் அழிக்கப்பட்டது.

Tags:    

Similar News