உள்ளூர் செய்திகள்

மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை-பெரம்பலூர் கோர்ட்டு தீர்ப்பு

Published On 2022-06-23 09:43 GMT   |   Update On 2022-06-23 09:43 GMT
  • கணவர் நடராஜன் பலமுறை கண்டித்து அஞ்சலை கேட்கவில்லை. இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த நடராஜன் மண்வெட்டியால் தாக்கி அஞ்சலையை கொலை செய்தார்.
  • வழக்கை விசாரித்த நீதிபதி பல்கீஸ், மனைவியை வெட்டி கொலை செய்த கணவன் நடராஜனுக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்கவேண்டும் என உத்தர விட்டார்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வேப்பூர் ஒன்றியம், அத்தியூர் கிராமம் பள்ளி கூடதெருவை சேர்ந்தவர் மலையன் மகன் நடராஜன் (வயது60). இவரது மனைவி அஞ்சலை. அஞ்சாலை வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார்.

இது குறித்து அவரது கணவர் நடராஜன் பலமுறை கண்டித்து அஞ்சலை கேட்கவில்லை. இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த நடராஜன் மண்வெட்டியால் தாக்கி அஞ்சலையை கொலை செய்தார்.

இது குறித்த புகாரின்பேரில் மங்களமேடு போலீசார் வழக்குபதிந்து நடராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் நடராஜன் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்.

இந்த கொலை வழக்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் தொடரப்பட்டு நடந்தது வந்தது. அரசு தரப்பில் வக்கீல் செந்தில்நாதன் ஆஜரானார்.

நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி பல்கீஸ், மனைவியை வெட்டி கொலை செய்த கணவன் நடராஜனுக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்கவேண்டும் என உத்தர விட்டார். இதையடுத்து போலீசார் குற்றவாளி நடராஜனை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News