உள்ளூர் செய்திகள்

இந்திய தொழிலாளர் கட்சி ஆர்ப்பாட்டம்

Published On 2022-08-02 12:38 IST   |   Update On 2022-08-02 12:38:00 IST
  • இந்திய தொழிலாளர் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
  • கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

பெரம்பலூர்:

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய தொழிலாளர் கட்சி சார்பில் நடந்த கோரிக்கை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் காவியமூர்த்தி, மாவட்டசெயலாளர் சசிகுமார், மாநில பொதுசெயலாளர் அய்யாசாமி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கல்குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்தும், கல்குவாரியில் இறந்த செந்தில்குமாரின் குடும்பத்திற்கு நிவாரண வழங்க வலியுறுத்தியும், பழங்குடியினரான குறவர் கலைக்கூத்தாடிகள் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் பட்டியல் சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தியும் , கல்குவாரிகளில் வேலை செய்யும் தொழிலாளர்களின் சமூக நீதிக்கான 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் சந்திரசேகர், வேல்முருகன், அலெக்ஸ், சுரேஷ் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியாவிடம் கோரிக்கை மனு அளித்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News