உள்ளூர் செய்திகள்

அரசு கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Published On 2022-08-26 14:43 IST   |   Update On 2022-08-26 14:43:00 IST
  • அரசு கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
  • மாத ஊதியத்தை வழங்கக்கோரி நடந்தது

பெரம்பலூர்:

பெரம்பலூர் அருகே குரும்பலூரில் இயங்கி வந்த பெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடந்த 2019-ம் ஆண்டு முதல் அரசு கல்லூரியாக மாற்றப்பட்டது. இந்த கல்லூரியில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் தற்காலிகமாக பணிபுரியும் கவுரவ, மணிநேர விரிவுரையாளர்கள் நேற்று காலை தங்களது பணிகளை புறக்கணித்து 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அவர்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட கவுரவ-மணி நேர விரிவுரையாளர்கள் கடந்த ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு ஆகிய 3 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை வழங்கிட வேண்டும்.

1.1.2020 முதல் உள்ள நிலுவை தொகையினை வழங்கிடவும், அனைத்து விரிவுரையாளர்களுக்கும் சம ஊதியம் ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும். மணிநேர விரிவுரையாளர்கள் என்ற பெயரை கவுரவ விரிவுரையாளர் மாற்றி அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் நிறைவேற்றி தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News