உள்ளூர் செய்திகள்

பிரபல ரவுடி தற்கொலை

Published On 2023-01-24 07:09 GMT   |   Update On 2023-01-24 07:09 GMT
  • தூக்கு போட்டு தற்கொலை
  • போலீசார் விசாரணை

பெரம்பலூர்,

பெரம்பலூர் எடத்தெருவை சேர்ந்த முருகேசன். பிரபல ரவுடியான இவர், கடந்த 2 நாட்களாக அவரது வீட்டிற்கு செல்லாமல் இவரது உறவினரான பெரம்பலூர் இந்திரா நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் செல்வக்குமார் என்பவரின் வீட்டிற்கு மது அருந்திவிட்டு வருவதும் போவதுமாக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முருகேசன் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News