உள்ளூர் செய்திகள்

செல்போன் கடை ஊழியர் ஓட, ஓட விரட்டி கத்தியால் குத்தி கொலை

Published On 2022-08-05 09:38 GMT   |   Update On 2022-08-05 09:38 GMT
  • செல்போன் கடை ஊழியர் ஓட, ஓட விரட்டி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்
  • 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

பெரம்பலூர்:

பெரம்பலூர் பெரியார் சிலை அருகேயுள்ள திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் கோபால் மகன் வினோத் (வயது 28), செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார்.

இவரது நண்பர் பெரம்பலூர் சுப்பிரமணிய பாரதியார் தெருவை சேர்ந்த துரை மகன் கார்த்திக் (25). இவர்கள் இருவரும் நேற்று மாலை பெரம்பலூர் நிர்மலா நகரில் உள்ள மாரியம்மன் கோவில் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர். இருவரையும் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் ஓட, ஓட வெட்டிவிட்டு தப்பினர்.

இதில் அந்த இடத்திலேயே வினோத் உயிரிழந்தார். வெட்டுக்காயங்களுடன் தப்பிய கார்த்திக், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் கொலை நடைபெற்ற இடத்துக்கு சென்று, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, விசாரணை நடத்தியதில், முன் விரோதகாரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் கொலை செய்த 6 பேர் கொண்ட கும்பலை தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News