உள்ளூர் செய்திகள்

மாவட்ட செயற்குழுக் கூட்டம்

Published On 2022-12-12 16:03 IST   |   Update On 2022-12-12 16:03:00 IST
  • மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடந்தது
  • தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

பெரம்பலூர்:

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம், பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் இளையராஜா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அரசு அலுவலகத்தில் உள்ள அனைத்து அலுவலக உதவியாளர் மற்றும் பிற துறைகளில் உள்ள சமையலர், இரவு காவலர்கள் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைத்து அலுவலக அடிப்படை பணியாளர்களுக்கும் சீருடை வழங்க வேண்டும். அலுவலக வேலையாக உதவியாளர்கள் வெளியே சென்று வர பயணப்படி வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News