- மாட்டு வியாபாரி தற்கொலை செய்துகொண்டார்.
- சர்க்கரை நோயால் சிறுநீரக பாதிப்பு
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வைத்தியநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம்(வயது 70). இவருக்கு சவுந்தரம் என்ற மனைவியும், 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகன்கள் மற்றும் மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. மனைவியுடன் வசித்து வந்த ராமலிங்கம், வெளிநாடு சென்று விட்டு கடந்த 2 ஆண்டுகளாக சொந்த ஊரில் மாட்டு வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் அவருக்கு சர்க்கரை நோயால் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதில் மனமுடைந்த ராமலிங்கம் நேற்று முன்தினம் தனது வயலுக்கு சென்று அங்கே இருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்துள்ளார். இதனை அறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.