உள்ளூர் செய்திகள்

நிலுவை வழக்குகளை விரைவாக முடிக்க கலந்தாய்வு

Published On 2023-01-11 12:26 IST   |   Update On 2023-01-11 12:26:00 IST
  • நிலுவை வழக்குகளை விரைவாக முடிக்க கலந்தாய்வு நடந்தது.
  • போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பெரம்பலூர் மாவட்ட காவல்துறையில் இயங்கி வரும் வாகனங்களை ஆய்வு செய்தார்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் குறித்து ஆய்வு செய்து, புலன் விசாரணை முடியாமல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கலந்தாய்வு செய்தார். இதில் போலீசார், மருத்துவத்துறையினர், சுகாதார துறையினர், போக்குவரத்து துறையினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு உள்பட பல்வேறு துறையினர் கலந்து கொண்டனர். முன்னதாக போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பெரம்பலூர் மாவட்ட காவல்துறையில் இயங்கி வரும் வாகனங்களை ஆய்வு செய்தார்.


Tags:    

Similar News