உள்ளூர் செய்திகள்
குடிமக்கள் நுகர்வோர் மன்ற விழிப்புணர்வு கூட்டம்
- குடிமக்கள் நுகர்வோர் மன்ற விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
- குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியை பிரியா தலைமை தாங்கினார். இதில், மாவட்ட குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் கதிரவன் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.