உள்ளூர் செய்திகள்

மாணவர்களிடம் கை குலுக்கி நலம் விசாரித்த முதல்வர்

Published On 2022-11-29 10:42 GMT   |   Update On 2022-11-29 10:42 GMT
  • மாணவர்களிடம் கை குலுக்கிய முதல்வர் நலம் விசாரித்தார்
  • மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

பெரம்பலூர்:

திருச்சியிலிருந்து பெரம்பலூருக்கு காரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பாடலூரில் காரை நிறுத்தி கீழே இறங்கினார்.

அப்போது அங்கு 50 மீட்டர் ரம் நடந்து சென்று, சாலையோரம் வரவேற்க நின்ற பள்ளி மாணவ, மாணவிகளிடம் கைகளை குலுக்கி நலமா இருக்கீங்களா என விசாரித்தார். பின்னர் பொதுமக்களை தேடி சென்று அவர்களது கைகளை குலுக்கி எல்லோரும் நல்ல இருக்கீங்களா என கேட்டார். முதல்வர் காரை விட்டு இறங்கி நடந்து வருவதை பார்த்த மக்கள் ஆரவாரம் செய்து கைகளை குலுக்க ஆர்வம் காட்டினர். பின்னர் பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களையும் முதல்வர் பெற்றுக் கொண்டார். பின்னர் காரில் சென்ற முதல்வர் சிறுவாச்சூரில் பள்ளி மாணவர்களை பார்த்ததும் காரை விட்டு கீழே இறங்கி கைகுலுக்கி நலம் விசாரித்து விட்டு சென்றார்.

வேப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மருவத்தூர் ரஜேந்திரன் தலைமையில் பேரளி மற்றும் குன்னம் கிராமத்தில் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஆலத்தூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் அதன் ஒன்றிய செயலாளரும் ஆலத்தூர் ஒன்றிய பெருந்தலைவருமான என்.கிருஷ்ணமூர்த்தி சார்பில் மேல மாத்தூரில் முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள முன்னாள் அமைச்சர் ராஜா அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தங்கி ஓய்வெடுத்தார். அப்போது மதியம் உணவு இடைவேளை சமயத்தில், முதல்வர் ஸ்டாலினிடம் விவசாய சங்க தலைவர்கள் ராஜாசிதம்பரம், திருச்சி அய்யாக்கண்னு மற்றும் நரிக்குறவர்கள் சங்க மாநில தலைவர் காரைசுப்ரமணியன் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து கட்சி செயல்பாடு குறித்து முதல்வர் கேட்டறிந்தார்.

பின்னர் அரியலூருக்கு கிளம்பியபோது முதல்வர் ஸ்டாலின், சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்களை பார்த்தவுடன் காரை நிறுத்தி விட்டு நடந்தே சென்று பொதுமக்களை பார்த்து கும்பிட்டு, கோரிக்கை மனுக்களை பெற்ற முதல்வர் 100 மீட்டர் தூரம் நடந்து சென்று பெண்கள், குழந்தைகள், கட்சியினர் என்று அனைவரையும் பாரத்து புன்முறுவலுடன் கை குலுக்கி பேசினார்.

Tags:    

Similar News