உள்ளூர் செய்திகள்

தீக்குளித்த இளம்பெண் உடல் கருகி பலி

Published On 2022-08-10 08:43 GMT   |   Update On 2022-08-10 08:43 GMT
  • தீக்குளித்த இளம்பெண் உடல் கருகி பலியானார்.
  • ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள இனாம் அகரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி மதியழகி (வயது 23). இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி மதியழகி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் கருகிய அவரை அப்பகுதி மக்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மதியழகி நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவருக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் பெரம்பலூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்."

Tags:    

Similar News