உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் லாரி மீது கார் மோதி வாலிபர் பலி - 2 பேர் படுகாயம்

Published On 2022-08-14 09:51 GMT   |   Update On 2022-08-14 09:51 GMT
  • சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், தண்ணீர்பந்தலில் அந்த கார் வந்தது.
  • வலது புறமாக சென்ற பஸ் ஒன்று மிக நெருக்கமாக வந்ததால் காரை ஹபீப் இடது பக்கமாக திருப்பினார்.

பெரம்பலூர் ;

சென்னை கோடம்பாக்கம் 2-வது தெரு ஈஸ்வர் நகரை சேர்ந்தவர் ஹபீப் (வயது 40). இவர், தொடர்ந்து அரசு விடுமுறை நாட்கள் வந்ததால் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதற்காக நேற்று மதியம் தனது காரில் பள்ளி நண்பர்களான சென்னை பாரிஸ் ஆண்டர்சன் தெருவை சேர்ந்த சிக்கந்தர்(40), கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஷாஹிப் (40) ஆகியோரை அழைத்து கொண்டு புறப்பட்டார்.

ஹபீப் காரை ஓட்டினார். மாலை 5.30 மணியளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், தண்ணீர்பந்தலில் அந்த கார் வந்தது. அப்போது வலது புறமாக சென்ற பஸ் ஒன்று மிக நெருக்கமாக வந்ததால் காரை ஹபீப் இடது பக்கமாக திருப்பினார்.

அப்போது கார் சாலையை விட்டு இறங்கி, முன்னால் சாலையோரமாக பழுதாக நின்ற லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது.

இதில் காரில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி ஹபீப், சிக்கந்தர், ஷாஹிப் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிக்கந்தர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News